Saturday, August 11, 2012

7. நெருடல்


மூட்டையில் அரிசியும்
பண்டக அறையில்
புளி, உப்பு, பருப்பு வகையறாவும்
குளிர்ப்பதனப் பெட்டியில்
காய்கறி வகைகளும்
சமைத்துப் போட மனைவியும்
பொழுது போக்க
நூலகத்தில் வாங்கி வந்த காசெட்டுகளும்
அவசரத்துக்கு வெளியே போக
பெட்ரோல் நிரப்பிய ஸ்கூட்டரும்
அளிக்கும் பாதுகாப்பில்
சம்பளத்துடன் வரும் 'பந்த்' விடுமுறையைக்
கழிப்பது தனி சுகம்தான்.
ஆனாலும்,
தினக்கூலிப் புருஷனுக்கு
'பந்தி'னால் வேலையில்லாததால்
அன்றைய 'காய்ச்சலுக்காக'
வேலைக்காரி
சம்பளத்தில் முன்பணம்
கேட்பதுதான் சங்கடம்!

(1990 - 2000 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் 'பந்த்' நடத்தும் நாட்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் நடைமுறை தமிழ்நாட்டில் இருந்தது.)

No comments:

Post a Comment