Monday, January 17, 2011

4. நினைவு

குளித்து
புத்தாடை உடுத்தி
வந்தோர்க்குக் காட்சி தந்து
கூட்டம் தொடர 
ஊர்வலம் கிளம்பிப் 
பாதி தூரம் சென்றபின் 
விட்டுப்போன விஷயங்கள்
நினைவுக்கு வர 
மீண்டும் போய் எடுத்து வர
முயன்றபோது முடியவில்லை 
கீழே  நாலு பேர்.  

 'புதிய பார்வை' ஜனவரி, 1993 இதழில் வெளியானது. எழுதியவர் : விஜயசாரதி.

No comments:

Post a Comment