Sunday, January 9, 2011

2. வயது

பள்ளிப்படிப்பை முடித்ததும்
யார் யாருக்கோ லஞ்சம் கொடுத்துப்
பட்டப்படிப்பில் சேர்ந்து
பரீட்சைகள்  பல எழுதி
பாஸ்  செய்து
படிகள் பல ஏறி
சான்றிதழ்கள் நகலெடுத்து
தட்டச்சுக்குப் பணம் இறைத்து
பலரைப் பார்த்துப் பல்லிளித்து
போகாத இடமெல்லாம் போய்க் கேட்டு
வேண்டாத தெய்வங்களுக்கெல்லாம் வேண்டுதல்கள் செய்து
ஏமாற்றங்கள் பலவும் தாங்கி
சளைக்காமல் முயன்று முயன்று
கஜினி முகமதைப் புறம் காட்டியபின் 
கடைசியில்
ஒரு நாள்
வேலையும் கிடைத்தது.
மறுநாளே ரிடையர் ஆகி விட்டான்.

No comments:

Post a Comment