Monday, September 24, 2012

14. ஒன்றே போதும்


இரண்டு மனம் வேண்டுமாம்*
ஏங்கினார் கவிஞர்.
அவரிடம் இல்லை போலும்!
என்னிடம் இருக்கிறது:
கொள்கை வகுத்து,
திட்டமிட்டு,
முறையாகச் செயல்படத்
தூண்டும் மனம் ஒன்று.
சோம்பலை வளர்த்து,
பொழுது போக்கில் லயித்து,
நேரத்தை விரட்டி,
திட்டங்களைத் தகர்க்கும்
இரண்டாவது.


*"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்."
'வசந்த மாளிகை'படத்தில்  கவிஞர் கண்ணதாசனின் பாடல்.

No comments:

Post a Comment