Monday, September 24, 2012

12. The Process


நெஞ்சில் குவிந்த துக்கமெல்லாம்
அழுகையாக வடிந்து தீரட்டும்.
ஆறாக வடியும் கண்ணீரால்
மனக்கிணறு வற்றட்டும்
ஈரம் காய்ந்த மனத்தில்
கோபாக்கினி கிளர்ந்து
காரணங்களைச்
சுட்டெரிக்கட்டும்!

No comments:

Post a Comment