கவிதைச் சிதறல்கள்
Monday, September 24, 2012
15. அடைக்கலம்
சிரிக்கும் மலர்களிலிருந்து
நறுமணத்தைச் சுமந்து வரும்
மெல்லியலாள் தென்றல்
சுமை தாங்காமல்
நறுமணத்தை உதிர்த்துச் செல்ல,
விருந்தோம்பி நாசிகள்
உபசரித்து வரவேற்று,
உள்ளே நுழைந்த
நறுமணத்தையே
விருந்தாக உட்கொள்ளும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment