Monday, September 24, 2012

15. அடைக்கலம்


சிரிக்கும் மலர்களிலிருந்து
நறுமணத்தைச் சுமந்து வரும்
மெல்லியலாள் தென்றல்
சுமை தாங்காமல்
நறுமணத்தை உதிர்த்துச் செல்ல,
விருந்தோம்பி நாசிகள்
உபசரித்து வரவேற்று,
உள்ளே நுழைந்த
நறுமணத்தையே
விருந்தாக உட்கொள்ளும்!

No comments:

Post a Comment