கன்றீந்து பாலுவக்கும்
தன்னலம் கருதாப்
பசுக்களும்,
உறக்கம்
துறந்து
லாரிகளில் பால் சுமந்து
விரதம் காக்கும்
ஓட்டுனர்களும்,
இரவு
பகல் மாறி வந்து
இயந்திரங்களை இயக்கி,
பால்தனைப் பதப்படுத்தி,
பைகளில் திணித்தணிப்பும்
திறம் பெற்ற தொழிலாளரும்,
பின்தூங்கி
முன்னெழுந்து
முன்காலைக் குளிர் பொறுத்து
லாரி வரும் வரை
காத்திருந்து
பாக்கெட்களைச் சுமந்து வரும்
ஊழியரும்
இணைந்து
வழங்குகிறார்கள்,
என்
காலைக் காப்பியை!

No comments:
Post a Comment