சிரித்து வாழ வேண்டும்!
விடாது கருப்பு என்பது போல்
அடாது தொல்லைகள் துரத்தும்போது
சிரித்து வாழ்வது எப்படி என்று
சீற்றம் கொள்ளும் மானிடரே!
எண்ணிப் பாரும் என் நிலையை!
உங்களுக்கென்ன?
துன்பம் வந்தால்
அழுது விட்டுப் போய் விடுவீர்கள்.
ஆனால் என் நிலைமை?
துன்பங்களும், சோர்வுகளும்
புயல் போல் நெஞ்சை அலைக்கழித்தாலும்
என் உணர்வுகள்
என் உதட்டில்
புன்னகையாகத்தான் வெளிப்பட வேண்டும்!
காலையில் எழுந்து பல் துலக்கும்போது
என் நிலையை எண்ணிப் பார்த்தால்
நீங்களும் சிரித்து வாழத் தொடங்குவீர்கள்
நான் ஒரு பற்பசை விளம்பர மாடல்!

No comments:
Post a Comment