Wednesday, March 4, 2026

46. சிரித்து வாழ வேண்டும் - 2

 சிரித்து வாழ வேண்டும்

துன்பக் கேணியில் ஊறி வரும் கண்ணீர்,

இன்பத்திலும் பெருகி வரும் பன்னீராய்.

இன்பத்தில் அழுவது நிகழுமென்றால்,

துன்பத்தில் சிரிப்பது இயலாதோ?

 

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்;

மேடுபள்ளம் அது கொண்ட நடனம்.

மேட்டில் ஏறுகையில் களிப்பில் மிதப்பவர்,

பள்ளத்தில் சரிகையில் பரிதவிப்பது ஏனோ?

  சிரித்து வாழ வேண்டும்


துன்பம் நேர்கையில் சிரி என்றார்

அன்பும் அறனும் பாதை என்ற வள்ளுவர்.

இன்பத்தில் இயல்பாக வரும் நகை

துன்பத்திலும் துணைநிற்றல் தலை

 

உழைப்பில் விளைவது உயர்வு – உடல்

களைப்பில் சுரப்பது வியர்வை – மனச்

சோர்வில் பிறப்பது அயர்வு – நல்

சிரிப்பில் தொலைவது சோர்வு

No comments:

Post a Comment