கனவும் நிஜமும்
பூத்துக் குலுங்கும் மலர்வனம் அங்கே
வீற்றிருக்கும் புற்கள் தலைநமிர்ந்து நிறைவாய்
ஓங்கிய செடி ஒன்றின் மலரின் மடியில்
தேங்கிய நீராய் அமர்ந்திருக்கும் பனித்துளி.
பச்சைப் புல் மீது பார்வை பட்டு அதன் மேல்
இச்சை கொண்டபனித்துளி புல்மேல் குதித்து
மெல்ல அதைத் தழுவும் கற்பனையில் சிலிர்க்கையில்
வில்லன் போல் வந்து அதைக் கவ்விச் செல்லும் சூரியக்கதிர்!

No comments:
Post a Comment