முற்றத்தில் பல நாளாய் எடுக்காமல் வைத்திருந்த
மிதிவண்டியைச் சுற்றிப் பிடித்திருந்த
முல்லைக் கொடியைக் கிள்ளி எறிந்தேன்
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின்
வழித்தோன்றல்தான் நானும் - ஆயினும்
பாரியிடம் பல தேர்கள் இருந்திருக்கும்
என்னிடம் இருப்பது ஒரு ஓட்டை சைக்கிள்தானே!
No comments:
Post a Comment