தென்றலின் கோபம்
மண்ணின் தளையிலிருந்து விடுபட முயலும்
மரங்களின் போராட்டம்
மனிதன் மீது இயற்கையின் படையெடுப்பு
கட்டிடங்களின் வலுவைச் சோதிக்கும் பரீட்சை
கண்ணுக்குப் புலப்படாத கண்ணகிகளின்
சாப விளைவு
எல்லா நீரும் ஒன்று சேர்ந்து உறவாடும்
குடும்ப வைபவம்
யாரோ நிறுத்த மறந்து விட்ட
இயற்கை எந்திரத்தின் வெடிப்பு
பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக
இயற்கையின் அனுதாப வெளிப்பாடு
பதுக்கல் தடுப்புச் சட்டத்துக்கு அஞ்சிப்
பதுக்கலிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட காற்று
மேடுபள்ளங்களை மாற்றி அமைக்கப்
புவி அரசின் சோஷலிச முன்னெடுப்பு!

No comments:
Post a Comment