நாங்கள் அகலிகைகள்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
ராமர்கள் வந்து
எங்களை உயிர்ப்பித்து
எங்களின் வாழ்த்துக்களைப்
பெற்றுக் கொண்டு
மீண்டும்
எங்களைக் கல்லாக்கி
மிதித்து விட்டுப் போகிறார்கள்!
இல்லை -
இவர்கள் ராமர்கள் இல்லை
ராமர் வேடத்தில் வரும்
ராவணர்கள்.
முன்பு எங்களை ஏமாற்றி
இந்நிலைக்கு ஆளாக்கிய
இந்திரர்களை விடக் கொடியவர்கள்!
உண்மையான ராமர்
ஒருநாள் வருவார்.
அதுவரை
காத்திருப்போம்
கல்லாக!
No comments:
Post a Comment