சிற்பி செதுக்கிய கல்லைத்
தெய்வமென்று நம்பிக்
கும்பிடும்
குருட்டு நம்பிக்கைச்
சாதியில்லை நான்.
வீரச் செங்குட்டுவனால்
வீழ்த்தப்பட்ட வட மன்னர்
கனகரும் விசயரும்
கோவலக் கண்ணகிக்குக்
கோயிலெடுக்க,
இமயத்திலிருந்து
எடுத்த கல்லைக்
கன்னியாகுமரி தாண்டிக்
கேரளம் வரைத்
தலையிலேயே
சுமந்து வந்த
'வரலாற்றைக்'
கேள்வி கேட்காமல்
நம்பும்
பகுத்தறிவு வாதி!
No comments:
Post a Comment