மாண்புமிகு மந்திரியின்
மானம் போக்க வந்த மகன்
இறக்குமதிக் காரை
வீதியில் வேகச் சோதனை
செய்தபோது
காரில் அடிபட்டு
இறந்துபோன
கன்றை நினைத்துக்
கதறிய தாய்ப் பசுவுக்கு
கேட்காமலேயே
நீதி வழங்கினார்
மனுநீதி மந்திரி -
விழா ஒன்று எடுத்து
வைக்கோல் கன்றைப்
பரிசளித்து!
No comments:
Post a Comment