Wednesday, October 10, 2012

17. மனுநீதி மந்திரி


மாண்புமிகு மந்திரியின்
மானம் போக்க வந்த மகன்
இறக்குமதிக் காரை
வீதியில் வேகச் சோதனை
செய்தபோது
காரில் அடிபட்டு
இறந்துபோன
கன்றை நினைத்துக்
கதறிய தாய்ப் பசுவுக்கு
கேட்காமலேயே
நீதி வழங்கினார்
மனுநீதி மந்திரி -
விழா ஒன்று எடுத்து
வைக்கோல் கன்றைப்
பரிசளித்து!

No comments:

Post a Comment