Wednesday, October 10, 2012

19. மொழிப் பிரச்னை


காலையில் கண் விழித்ததும்
கலகவென்று உரையாடும்
குருவிகளைக்
காண்கிறேன்.

எவ்வளவு முயன்றும்
அவை பேசும் மொழி
எனக்குப் புரிவதில்லை

அவற்றின் மொழியைக் கற்க
ஒரு வழிதான்.

நானும் அந்தக் குருவிகள் போல்
சுதந்திரமாய் உணர்ந்து
கீசுகீசென்று
அவை மொழியில்
பேசிப் பழக வேண்டியதுதான்.

ஆனால் அப்போது
என் மொழி
புரியாமல் போய் விடும்
பிற மனிதர்க்கு!

No comments:

Post a Comment