Friday, October 12, 2012

25. இருப்பிடம்


கூட்டம் நிறை கோவிலில்
உள்ளடங்கிய இருட்டில்
உபய விளக்குகளின்
ஒளிப் பிழம்பிலும்,
பூஜை அறைத் தனிமையில்
பூ வைத்த படங்களின்
ஊதுவத்தி மணத்திலும்
புலப்படாது
நழுவிய தெய்வம்
பிறர் துன்பம் கண்டிறங்கிப்
பயன் கருதாது உதவும்
பரந்த நெஞ்சின் உள்ளிருந்து
விஸ்வரூபக் காட்சி தரும்.

No comments:

Post a Comment