அமைதியான ஆற்றோட்டமும்
பாடும் மூங்கில்களும்
ஆடும் செடிகளும்
அப்பாவிக் கால்நடைகளும்
வஞ்சனையின்றிப்
பரந்து கிடக்கும்
உதிர்ந்த பூக்களும்
நெரிசல் இல்லா வீதிகளும்
தூசும் அழுக்கும் புகையும்
கலவாத சூழலும்....
கிராமங்கள் அழகுதான்
ஆனால்
அங்கிருக்கும்
பசிதீராப் பாட்டாளிகளையும்
படிப்பறிவில்லா பாலர்களையும்
சிரிப்பு மறந்த முகங்களையும்
பற்றி
நமக்கென்ன?
No comments:
Post a Comment