Thursday, October 11, 2012

21. ஓயாத அலைகள்


சலிக்காமல் திரும்பத் திரும்பக்
கரையில் மோதும் அலைகளே!
நீங்கள் கேட்பதென்ன, பெறுவதென்ன?

கைநீட்டி மீண்டும் மீண்டும்
கதறி கதறிக் கேட்டாலும்
நாங்கள்
கைகொட்டி ரசித்து
வேடிக்கைதான் பார்ப்போமே தவிர
நீங்கள் கேட்பதைக்
கொடுத்துவிடப் போவதில்லை.

எனவே
வறட்டு இரைச்சல் போட்டு
வீணாக மோதுவதைக் கைவிட்டுக்
கரை கடந்து
உள்ளே வந்தால்
வேண்டியதை
எடுத்துச் செல்லலாம்.

No comments:

Post a Comment