Sunday, October 14, 2012

33. Side Effect


குளக்கரையில்
வெண்ணிலவின் மென் தழுவலில்
காதலியின் அண்மையில்
கிறுகிறுத்த காதலன்
காதலியை வர்ணித்தான்
'நிலவு முகத்தவளே' என்று.

கேட்டுக் கொண்டிருந்த அல்லி
அதிர்ந்து கூம்பியது.
'பெண்மை இயல்புடையவனா என் காதலன்?'

No comments:

Post a Comment