எங்க ஊர் கண்ணகிக்கு
யாரும் சிலை எடுக்கவில்லை.
அடுத்த வேளைச் சோற்றுக்காக
அடகு வைக்க எடுத்துச் சென்ற
அவள் ஒற்றைக்கால் கொலுசினால்
திருடன் என்று தீர்மானிக்கப்பட்டு
'தள்ளிச்' செல்லப்பட்ட
புருஷன் கோவாலு
அடித்துக் கொல்லப்பட்டதால்
அவள் இபோது விதவை.
கண்ணகிபோல் இவளுக்கும்
கொளுத்தும் வெறி உண்டு
கெரசின்தான் கிடைக்கவில்லை!
No comments:
Post a Comment