Thursday, October 11, 2012

22. காத்திருத்தல்


நாராய் நாராய்
செங்கால் நாராய்!
எங்கிருந்து வருகிறாய்?
எங்கே போகிறாய்?

நீ செல்லும் வழியில்
எங்கள் நல்லமைச்சர் நம்பியைப்
பார்த்தால் சொல்.

ஆற்றின்மீது போட்ட பாலம்
ஆறு மாதமாய்
மூடியே இருக்கிறது.

அவர் வந்துதான்
திறக்க வேண்டுமாம்!

No comments:

Post a Comment