நிலமாக முன்பு இருந்தது
இப்போது நீர்.
மிதப்பவை
கட்டு மரங்கள் அல்ல -
மனிதக் கட்டைகள்.
காற்றுப் போன காயங்கள்.
மரக் கட்டைகளும் மிதக்கின்ற.ன
முன்பு
தூணாக, கூரையாக, வீடாக
இருந்தவை.
ஆங்காங்கே தீவுகள்.
அவற்றில் ஒதுங்கும்
மனிதர்கள்
வானத்தை நோக்கியபடி.
முன்பு மழை இல்லாதபோது பார்த்ததும்
பெய்த மழை நிற்காதா என்று பார்த்ததும்
இப்போது பார்ப்பதும்
வெவ்வேறு பார்வைகள்!
உறவுகளும், உடைமைகளும்
போன பின்னும்
வயிறு மட்டும் மிஞ்சி விட்டதால்
வானத்திலிருந்து விழப் போகும்
உணவுப் பொட்டலங்களை
எதிர்பார்க்கும்
பார்வைகள்!
No comments:
Post a Comment